ஜகார்த்தா: இந்தோனீசியாவின் 'லயன் ஏர்' நிறுவனத்துக்குச் சொந்தமான மற்றொரு விமானம் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கியது. புதன் கிழமை இரவு பெங்குலு நகரத்திலிருந்து 145 பயணிகளுடன் 'ஜேடி633' விமானம் புறப்பட்டபோது அதன் இறக்கை பகுதி ஓடு தளத்திலிருந்த கம்பத்தின் மீது மோதியது. இதனால் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. அந்த விமானம் ஜகார்த்தாவின் சுகார்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்துக்குச் செல்லவிருந்தது. விமானம் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் நகர்ந்தபோது முக்கிய விருந்தினர் கட்டடத்தின் முன்புறம் இருந்த கம்பத்தின் மீது விமானத்தின் இடதுபக்க இறக்கை மோதியது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரி வித்தன.
இதையடுத்து பயணிகள் அனை வரும் ஜகார்த்தாவுக்குச் செல்லும் மற்றொரு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே இர்சான் ஹிடயாட் என்பவர் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட படத்தில் விமானத்தின் இடதுபக்க இறக் கையில் சிறிய பகுதி உடைந்திருப் பதைக் காண முடிந்தது. இந்நிலையில் சம்பவம் குறித்து இந்தோனீசியாவின் போக்குவரத்து அமைச்சு விசாரணையைத் தொடங் கியுள்ளது.