தேவிகா சதீஷ் பனிக்கர், 24, என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு ஏழு வயதானபோது அவருடைய வீட்டில் தங்கியிருந்த குடும்ப நண்பர் பாலியல் ரீதியில் தேவிகாவை கொடுமைப்படுத்திவிட்டார். நல்ல மனிதர், பெருந்தன்மை மிக்கவர் என்றெல்லாம் அந்தக் குடும்ப நண்பரை பற்றி குமாரி தேவிகா நினைத்திருந்தார். ஆனால் ஓராண்டுக்கும் அதிக காலம் அந்த நண்பர் தேவிகாவை மனமுடையச் செய்துவிட்டார். கடைசியில் ஒரு வழியாக அவரைப் பற்றி தேவிகாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. போலிசில் புகார் தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து அந்தக் குற்றவாளிக்கு ஆறாண்டு சிறைத் தண்டனை கிடைத்தது.
14 பிரம்படித் தண்டனைகளும் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் தேவிகாவை பொறுத்தவரையில் மனரீதியிலான பாதிப்புகள் அவரைச் சுற்றிச் சுற்றியே வந்தன. தொடக்கப்பள்ளியில் பாலியல் கல்வி படித்தபோதுதான் எல்லாமே அவருக்கு முழுமையாகத் தெரியவந்தது. அத்தகைய சம்பவத்தை மறந்துவிடும்படி பெற்றோர் தேவிகா வுக்கு ஆலோசனை கூறிவந்தார்கள். ஆசிரியரிடம் கூறியபோது அவரோ தேவிகா பொய் சொல்வதாக தெரி வித்துவிட்டார். ஆசிரியரே தன்னைப் பற்றி நம்பாதபோது வேறு யார் நம்புவார்கள் என்ற உணர்வுடன், தான் தனித்து விடப்பட்டதாக தேவிகா உணர ஆரம்பித்தார். அடுத்த சில ஆண்டு களில் ஒதுங்கிவிட்டார். தோழிகளை இழந்தார். படிப்பும் சரியில்லை. தற்கொலை எண்ணம் கூட மனதில் ஓடியது.
அந்த நிலையில் அமெரிக்காவின் ஊடகத் துறை பேராளர் ஓஃப்ரா வின்ஃப்ரே எழுதிய ஒரு புத்தகத்தை தேவிகா படித்தார். அந்த எழுத்தாளர் சிறு வயதில் பாலியல் கொடுமைக்கு ஆளானவர். ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு உலகிலேயே மிக செல்வாக்குமிக்க மனிதர்களில் ஒருவராக அந்த அமெரிக்கர் திகழ்வதை குமாரி தேவிகா மனதில் கொண்டார். தனக்கு ஏற்பட்ட அனுபவங் களை மற்றவரிடம் பகிர்ந்து கொண்டால் தன்னைப் போன்ற சூழ்நிலையை எதிர்நோக்கும் மற்றவர்களுக்கு உதவி கிடைக் கும் என்று தேவிகா நம்புகிறார். மற்றவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். "மற்றவர்களுக்கு விழிப்பூட்டுவதன் மூலம் எனக்கு நானே விழிப்பூட்டிக் கொள்கிறேன். எனக்கு நிகழ்ந்த அனுபவத்தை என்னுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு நோக்கத்தைக் கொடுத் திருக்கும் ஒரு சம்பவம் என்று நான் நினைக்கிறேன். அதைப் பயன் படுத்தி ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்த நான் முயல்கிறேன்," என்கிறார் குமாரி தேவிகா.