இருநாட்டுக் கூட்டுறவை வலியுறுத்தும் பிரதமர் லீயின் இந்திய பயணம்

புதுடெல்லியிலிருந்து தமிழவேல்

பல ஆண்டுகளாகவே சிங்கப்பூரும் இந்தியாவும் வர்த்தகம் புரிந்து வந்திருந்தாலும் இரு நாடுகளுக் கிடையே நிலவும் நல்லிணக்கமும் வர்த்தகக் கூட்டுறவும் கடந்த சில ஆண்டுகளாக வேக வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து சிங்கப்பூர்- இந்தியா இரு நாட்டு வர்த்தகத்துக்கான வாய்ப்பு கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு திரு மோடி இங்கு வருகை தந்தபோது இந் தியா=சிங்கப்பூர் உத்திபூர்வ பங்காளித்துவ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த இருநாட்டுக் கூட்டுறவின் மேம்பாட்டைத் தொடர்ந்து நிலை நாட்டவும் இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தைக் கண்டறியவும் பிரதமர் லீ சியன் லூங் இந்தியாவுக்கு ஐந்து நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார். உத்திபூர்வ பங்காளித்துவ ஒப் பந்தம் செய்யப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையேயும் தற் காப்பு, வர்த்தகம், நிதித்துறைகளில் புதிய உடன்பாடுகளும் கூட்டு முயற்சிகளும் நடைபெற்று வந்துள் ளன. அதேபோல இரு நாடு களுக்கு இடையே உயர் மட்ட அர சியல் பரிமாற்றங்கள் இவ்வாண்டு நடைபெற்றுள்ளன. இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கள் இங்கு வருகை தந்தனர்.

இந்திய தற்காப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் சிங்கப்பூரில் ஜூன் மாதம் நடைபெற்ற தற்காப்பு அமைச்சர்கள் ஷங்கிரிலா கலந்து ரையாடலில் கலந்துகொண்டார். மேலும் இந்தியாவின் சாலைப் போக்குவரத்து விரைவுச்சாலை அமைச்சர் நித்தின் கட்காரி செப் டம்பர் மாதம் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்ள இங்கு வந்திருந்தார். சிங்கப்பூர் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் இவ் வாண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் இந்தியப் பயணம் மேற் கொண்டுள்ளார். பொருளியல் ரீதியாகவும் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் பெருகியுள்ளது. இந்தியா சிங்கப் பூரின் 10ஆவது பெரிய வர்த்தகப் பங்காளித்துவ நாடாகத் திகழ் கிறது. சிங்கப்பூருக்கும் இந்தியாவுக் கும் இடையிலான மொத்த வர்த் தகம் கடந்த ஆண்டு $22 பில் லியனைக் கடந்துள்ளது. சிங்கப்பூரில் இந்தியாவின் முதலீடு கடந்த 2014ஆம் ஆண்டு $19 பில்லியனைக் கடந்துள்ளது.

இந்தியாவில் சிங்கப்பூரின் முதலீடு கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகரித்துள்ளது. அப்போது $653 மில்லியனாக இருந்த சிங்கப்பூர் முதலீடு கடந்த ஆண்டு $19.4 பில்லியனைக் கடந்துள்ளது. சொல்லப்போனால் சின்னஞ் சிறிய சிங்கப்பூர் இந்தியாவின் இரண்டாம் பெரிய வெளிநாட்டு முதலீட்டு நாடாகத் திகழ்கிறது என்பதே இந்தியாவின் வளர்ச்சி யில் சிங்கப்பூர் கொண்டுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. இந்தியாதான் ஆகப் பெரிய எண்ணிக்கையில் சிங்கப்பூரில் நிறுவனங்களை நிறுவியுள்ள நாடு. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் வர்த்தகம் புரிய 8,500க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரைத்தான் மையமாகக் கொண்டுள்ளன. இதுபோன்ற இன்னும் பல வர்த்தக் வாய்ப்புகளையும் கூட்டுறவுகளையும் இரு நாடுகளும் ஆராய்ந்து வரும் வேளையில் பிரதமர் லீயின் இந்தியப் பயணம் மேலும் பல கதவுகளைத் திறக்கும் என்று நம்பலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!