பாசிர் ரிஸ் முகாமுக்கு வந்த புருணை சுல்தான்

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட புருணை சுல்தான் ஹசனல் போல்கியா நேற்று சிங்கப்பூர் ஆயுதப் படையின் பாசிர் ரிஸ் முகாமுக்கு வருகைஅளித்தார். அவருடன் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், ராணுவப் படை தலைவர் மெல்வின் ஓங் ஆகியோர் இருந்தனர். பாசிர் ரிஸ் முகாமில் இடம்பெற்ற சிங்கப்பூர் ஆயுதப் படைகளைச் சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்புப் படையின் பாவனை பயிற்சியையும் வான்குடை வீரர்களின் சாகசங்களையும் சுல்தான் போல்கியா பார்வையிட்டார். அத்துடன், பாவனை பயங்கரவாதிகள் இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தும் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டார். வான்குடை வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியின் இறுதியில், சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் கௌரவ மேம்பட்ட ராணுவ வான்குடை சாகச இறக்கைச் சின்னம் சுல்தான் போல்கியாவுக்கு வழங்கி சிறப்பிக்கப் பட்டது.

பாசிர் ரிஸ் முகாமுக்கு நேற்று வருகையளித்த புருணை சுல்தான் ஹசனல் போல்கியா (முன்வரிசை, வலது), மரியாதை காவல் அணியைப் பார்வையிட்டார். அவருக்குப் பின்னால் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் ராணுவப் படை தலைவர் மெல்வின் ஓங்கும் வருகின்றனர். படம்: தற்காப்பு அமைச்சு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!