மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக அரியணை ஏறிய தாய்லாந்தின் புதிய மன்னர் மகா வஜ்ரலோங்கோர்ன் அதிகாரபூர்வமாக முடிசூட்டப்பட்டுள்ளார். முடிசூட்டு விழாவுக்கான சடங்குகள் மூன்று நாட்கள் நீடிக்கும்.
69 ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற்ற முதல் முடிசூட்டு விழா இது. தனது தந்தை மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மறைவுக்கு அடுத்து மகா வஜ்ரலோங்கோர்ன் புதிய மன்னராகிறார்.
மக்களின் நன்மைக்காவும் மகிழ்ச்சிக்காகவும் தமது ஆட்சியைத் தொடர்ந்து முன்னேற்றப்போவதாக மன்னர் வஜ்ரலோங்கோர்ன் முடிசூடிய பிறகு தெரிவித்தார்.