நயன்தாரா தற்பொழுது ஓர் இந்திப் படத்தில் நடித்துக்கொண்டிருக்
கிறார். அதனால் அவரும் விக்னேஷ் சிவனும் மும்பையில் தங்கி இருக்கின்றனர்.
நேற்று முன்தினம் இருவரும்
அங்கிருக்கும் சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றிருக்கின்றனர். இருவரும் சாமி தரிசனம் முடிந்த பிறகு எடுத்த படங்களை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் படத்தில் நயன்தாரா உடல் மெலிந்து, கன்ன எலும்பு தெரியும் அளவிற்கு கன்னம் ஒட்டிப்போய் காணப்பட்டதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள், "தலைவிக்கு என்ன ஆனது? எங்கள் தலைவியை
எப்போது திருமணம் செய்வீர்கள் இயக்குநரே," என்று கவலையுடன் கேட்டு பதிவிட்டிருந்தனர்.
படங்களுடன் அவர் கோவிலி
லிருந்து வெளியே வந்ததும் சாலையோரக் கடையில் ஒரு பையை பேரம் பேசி வாங்கியிருக்கிறார். அந்தக் காணொளியும் வலைத்தளத்தில் வெளியானது.
அதைப் பார்த்த அவரின் ரசிகர்கள், "தலைவி பேரம் பேசும் அழகே அழகு," என்று பதிவிட்டிருந்தனர்.
ஒரு சிலர், "கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா சாலையோரக் கடையில் பேரம் பேசுகிறார். இதுவே விலையுயர்ந்த பைகளை விற்கும் வணிக வளாகங்களாக இருந்தால் பேரம் பேசாமல் சொல்லும் விலைக்கு வாங்குவார். ஏழையிடம்தான் பேரம் பேசுவார்கள்," என்று கண்டித்தும் பதிவிட்டிருக்கின்றனர்.
இவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருக்கும் 'அண்ணாத்த' படம் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து இவர் தன் காதலரின் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படத்தில் நயன்தாராவின் தங்கையாக சமந்தா நடித்துள்ளார்.