சிம்புவும் ஹன்சிகாவும் மீண்டும் திரையில் இணைய உள்ளனர். நந்தா பெரியசாமி இயக்கும் படத்தில் இருவரும் நடிப்பது உறுதியாகிவிட்டது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாள்களுக்குப் பிறகே வெளியாகுமாம்.
'மாநாடு' படத்தின் வெற்றி சிம்புவை உற்சாகப்படுத்தி உள்ளது.
அடுத்து அதிலிருந்து மாறுபட்ட ஒரு கதைக்களத்தில் நடிக்க விரும்புகிறாராம். ஹன்சிகாவும் 'மகா' படத்தை முடித்துவிட்டு புதுக் கதைக்காக காத்திருந்தார்.
இந்நிலையில் நகைச்சுவை நிறைந்த குடும்பப் படம் ஒன்றை இயக்குகிறார் நந்தா பெரியசாமி. அவர் இயக்கி முடித்துள்ள 'ஆனந்தம் விளையாடும் வீடு' விரைவில் திரைகாண உள்ளது.
இவர் கூறிய கதை பிடித்துப்போனதால் சிம்பு, ஹன்சிகா இருவருமே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.