ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பாணை

இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அந்நாட்டு அமலாக்கத் துறை அழைப்பாணை விடுத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

உலகச் செல்வந்தர்கள், பிரபலங்கள் ஆகியோர் மறைத்து வைத்திருந்த சொத்தையும் கருப்புப் பணத்தையும் பற்றிய தகவல்களை வெளியிட்ட பனாமா ஆவணங்களின் தொடர்பில் ஐஸ்வர்யாவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறின.

அவரது பெயரும் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றிருந்தது.

வரி செலுத்துவதைத் தவிர்க்க ஐஸ்வர்யா வெளிநாட்டில் சொத்துகளைக் குவித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டது.

அதன் தொடர்பில் ஐஸ்வர்யாவை விசாரிக்க இந்திய அமலாக்கத் துறை விரும்புவதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறின.

இதற்கு முன்னரும் இந்திய அமெலாக்கத் துறை ஐஸ்வர்யாவை விசாரணைக்காக அழைத்திருக்கிறது.

ஆனால் கால அவகாசம் கோரி அந்த விசாரணையை அவர் இரு முறை தள்ளி வைத்திருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!