இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அந்நாட்டு அமலாக்கத் துறை அழைப்பாணை விடுத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
உலகச் செல்வந்தர்கள், பிரபலங்கள் ஆகியோர் மறைத்து வைத்திருந்த சொத்தையும் கருப்புப் பணத்தையும் பற்றிய தகவல்களை வெளியிட்ட பனாமா ஆவணங்களின் தொடர்பில் ஐஸ்வர்யாவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறின.
அவரது பெயரும் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றிருந்தது.
வரி செலுத்துவதைத் தவிர்க்க ஐஸ்வர்யா வெளிநாட்டில் சொத்துகளைக் குவித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டது.
அதன் தொடர்பில் ஐஸ்வர்யாவை விசாரிக்க இந்திய அமலாக்கத் துறை விரும்புவதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறின.
இதற்கு முன்னரும் இந்திய அமெலாக்கத் துறை ஐஸ்வர்யாவை விசாரணைக்காக அழைத்திருக்கிறது.
ஆனால் கால அவகாசம் கோரி அந்த விசாரணையை அவர் இரு முறை தள்ளி வைத்திருக்கிறார்.