நடிகை வனிதா விஜயகுமார் 'தில்லு இருந்தா போராடு' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் பெண் ரவுடி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை கே.முரளிதரன் இயக்குகிறார்.
மேலும், இந்தப் படத்தில் அவருக்கு 'வைரல் ஸ்டார்' என்ற பட்டத்தையும் கொடுத்துள்ளனர்.
பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், இணைய ஊடகங்கள் மூலம் தன்னைப் பற்றிய பரபரப்பான செய்திகள் தொடர்ந்து வெளி வருமாறு பார்த்துக்கொள்கிறார் வனிதா.
பட்டப்படிப்பு படித்துள்ள கிராமத்தைச் சேர்ந்த பாண்டிக்கு எங்கு கேட்டும் வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு பிரியா என்ற காதலி கிடைக்கிறாள்.
இந்நிலையில், பல அவமானங்களைச் சுமக்கும் பாண்டி, மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிறான்.
இதனால் கோபமடையும் அவனது தாய், மகனை வீட்டை விட்டு விரட்டுகிறாள். அதன் பிறகு அவ னது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுகிறது.
பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற பெண் தாதாவின் உதவி கிடைக்கிறது. அதனால் மெல்ல காலூன்றும் வேளையில், புதுப் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.
இதில் பஞ்சாயத்து பரமேஸ்வரிகதாபாத்திரத்தில் நடிக்கிறார் வனிதா. இந்தக் கதையை விறுவிறுப்பான திரைக்கதையுடன் வழங்க உள்ளோம். அதனால் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்," என்கிறார் முரளிதரன்.