அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த படம் 'புஷ்பா'. இந்தப் படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்திருந்தார். அவர் இந்தப் படத்திற்காக காட்டிலும்
மேட்டிலும் கஷ்டப்பட்டு நடித்திருந்தாலும் அந்தப் படத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டும் வந்து
பெயரைத் தட்டிச் சென்றுவிட்டார் சமந்தா.
சுகுமார் இயக்கிய 'புஷ்பா' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். உலகம்
முழுவதும் பல மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்
சனங்களைப் பெற்றாலும் வசூலை வாரிக் குவித்தது.
குறிப்பாக இப்படத்தில்
பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விஷயம் சமந்தா ஆடிய
'ஓ சொல்றியா' பாடல்தான். இதுவரை
இல்லாத கவர்ச்சியில் சமந்தா ஆடிய இந்தப் பாடல் பெரும் அதிர்
வலைகளை ஏற்படுத்தியது.
ஒரு பக்கம் பல
சர்ச்சைகள் எழுந்தாலும் மறுபக்கம் அப்பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அந்தப் பாடலுக்காகவே பலர் மீண்டும் மீண்டும் அப்படத்தை பார்த்தனர் என்றுகூட சொல்லலாம்.
அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில்
பிரபலமடைந்தது
'ஓ சொல்றியா மாமா' பாடல். மேலும்
அப்பாடலுக்காக சமந்தா ஐந்து கோடிவரை
சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளி
வந்துள்ளன.
இந்நிலையில் சமந்தாவின் நடனத்திற்கு திரையுலகில் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. பல படங்களில் 'ஓ சொல்றியா' பாடல்போல ஒரு பாடலுக்கு நடனமாட கேட்டு வருகின்றனர்.
இதையடுத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிவரும் 'லிகர்' படத்திலும் ஒரு பாடலுக்கு சமந்தாவை ஆடச்சொல்லி படக்குழு அணுகியது.
ஒரு சில மணிநேர உழைப்புக்கு அதிக
சம்பளம் கிடைப்பதால் சமந்தாவும் இப்படத்தில் ஆட ஒப்புக்கொண்டுள்ளாராம்.
'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா' பாடலைப் போன்றே இப்பாடலையும் எடுக்கப் போவதாக சொல்கின்றனர் 'லிகர்' படக் குழுவினர். எனவே இதைப் பற்றிய
அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் சமந்தா சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா சென்ற புகைப்படங்களையும் காணொளி
களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பனிச்சறுக்கு செய்யும் காணொளியையும் பகிர்ந்திருந்தார் சமந்தா. அந்தக் காணொளியை அவரது
ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், தற்போது இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து கறுப்பு நிற மேல் சட்டையுடன் பால்கனியில் நின்றவாறு இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்
படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுவதுடன் சில மணி நேரங்களில் 16 லட்சத்துக்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எரிந்துவிட்டு தனது இலக்கை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறார் சமந்தா.