‘லியோ’ படத்தின் படப்பிடிப்பிலிருந்து திரிஷா பாதியிலேயே ென்னை திரும்பியதாக வெளியான தகவலில் பாதிதான் உண்மை என அப்படக்குழு தெரிவித்துள்ளது.
அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்க 180 பேர் கொண்ட படக்குழு அண்மையில் அங்கு சென்றது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் படக்குழுவினர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனராம். சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து, திரிஷா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கி உள்ளனர்.
“காஷ்மீரில் முக்கியமான சண்டைக்காட்சி, பாடல் காட்சிகளை எடுத்து வருகிறோம். அதில் திரிஷா குறைவான நேரமே திரையில் தோன்றுவார். எனவே, அந்தப் பகுதியை முதலில் படமாக்கியதால் அவர் தொடர்ந்து காஷ்மீரில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இதேபோல், மேலும் சிலரும் தங்களுக்கான சிறு பகுதிகளில் நடித்து முடித்ததால் ஊர் திரும்பினர். எனவே, யாரும் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் செல்லவில்லை,” என்கிறது இயக்குநர் லோகேஷ் தரப்பு.