சிறு வயதிலிருந்தே சீருடை குழுக் களிலும் ஆகாயப் படையிலும் ஆர் வத்துடன் செயலாற்றி வருகிறார் முதல் வாரண்ட் அதிகாரி விஜய் குமார் ரெங்கபாஷ்யம், 45 (படம்). ஏழாவது முறையாகத் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் இவர், சிங்கப்பூர் குடியரசு விமானப் படையின் CH=47 சினூக் ஹெலி காப்டர் இருந்தபடி படைக்கும் கொடி சாகசக் காட்சியில் (flag flypast) பங்கேற்கிறார். சினூக் ஹெலிகாப்டரில் பறந்த வாறு கொடியை வெற்றிகரமாக ஏற்றும் பொறுப்பிற்குத் தலைமைத் தாங்குகிறார் ஆகாய பணிக்குழு நிபுணரான இவர். ‘கொடிகட்டி’ பறக்கும் விஜய்குமார் இதற்குமுன், தேசிய தின அணிவகுப்பில் நான்கு முறை கொடி சாகசக் காட்சிகளிலும் இரண்டு முறை ஊடகப் பயன்பாட் டிற்கான வான்வெளி படப்பிடிப் பிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.
“இந்தப் பொறுப்பும் வேலையும் எனக்குப் பழகிவிட்டாலும் பாடாங் அரங்கத்தில் கவனம் தேவை. பல உயர்ந்த கட்டடங்களும் தடங்கல் களும் இருக்கின்றன. முறையாகத் திட்டமிட்டுச் செயல்படுவது அவ சியம்,” என்றார் 24 ஆண்டுகளாக ஆகாயப் படையில் பணியாற்றி வரும் இவர். ‘கொடிகட்டி’ பறக்கும் விஜய்குமார் 2015ல் பாடாங் அரங்கில் நடந்த தேசிய தின அணிவகுப்பி லும் இவர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொள் வதன் மூலம் எதையும் பரந்த கண் ணோட்டத்துடன் அணுகக் கற்றுத் தந்துள்ளதோடு தமது நுண்சிந் தனைத் திறனையும் மேம்படுத்தி உள்ளது என்று இவர் குறிப்பிட்டார்.
‘கொடிகட்டி’ பறக்கும் விஜய்குமார் “இன, சமய வேறுபாடின்றி அனைத்து சிங்கப்பூரர்களையும் இணைக்கும் ஒரு கொண்டாட்டம் தேசிய தினம். நம் சுதந்திரத்தையும் கடின உழைப்பையும் கொண்டாடு வது முக்கியம். அமைதி, பாது காப்பு, நிலைத்தன்மை ஆகிய அம் சங்களைக் கட்டிக்காக்க இது வழிவகுக்கிறது,” என்றார் இவர். தாம் பங்கேற்கும் ஒவ்வொரு தேசிய தின அணிவகுப்பையும் குடும்பத்தினர் தவறாமல் கண்டு களித்து வருவது இவருக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.