சார்ஸ் நோய் 2003ஆம் ஆண்டில் சிங்கப்பூரைத் தாக்கியபோது திருமதி சு.நா. முல்லாத் பிஜு, டான் டோக் செங் மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிந்து வந்தார்.
சார்ஸ் நோயாளிகளைப் பரா மரிக்கும் பொறுப்பில் இருந்த அவர், அந்நோயைப் பற்றி அப்போது போதிய விவரம் இல்லாததால் சற்றுப் பதற்றமாகவே இருந்தது என்றார்.
ஆனால் மருத்துவ நிர்வாகத் தினர் நோய்ப் பரவல் தடுப்பு வழிமுறைகளை அமல்படுத்தி அனைவரும் அதனை முறையாக பின்பற்றுவதை உறுதிசெய்ததை திருமதி பிஜு நினைவுகூர்ந்தார். அதனால் அந்த இக்கட்டான காலகட்டத்தை வெற்றிகரமாக கடக்க முடிந்தது என்றார் அவர்.
டான் டோக் செங் மருத்துவ மனையில் கிட்டத்தட்ட 23 ஆண்டு கள் சேவையாற்றிய பின்னர், மன நலக் கழகத்தில் 2018ஆம் ஆண்டில் சேர்ந்தார் திருமதி பிஜு.
ஆனால் சுமார் இரண்டு ஆண்டுகளில் சார்ஸ் பரவலைப் போன்ற மோசான சூழ்நிலையை கொவிட்-19 கிருமித்தொற்று ரூபத்தில் அவர் சந்தித்தார்.
மருந்தியல் தாதியான திருமதி பிஜு, மனநலப் பிரச்சினை உள்ளவர்கள் மற்ற நோய்கள் அல்லது தொற்று நோய் உள்ளபோது தங்கிருக்கும் பிரிவைப் பராமரிக்கும் தாதியர் குழுவை வழிநடத்தி வருகிறார்.
"முந்தைய வேலை அனுபவம் தற்போதைய கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலைச் சமாளிக்க பெரிதும் கைகொடுத்தது. கிருமித்தொற்றால் பாதிப்படைந்த நோயாளிகளைப் பராமரிக்கவும் நோய் பரவாமல் இருக்க சக தாதியர் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப் படுத்தவும் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடிந்தது," என்று தெரிவித்தார் மனநலக் கழக மருத்துவத் தனிமைப்படுத்துதல் பிரிவில் பணியாற்றும் 45 வயது தாதி பிஜு.
மனநலப் பிரச்சினை உள்ளவர் களுக்கு கொவிட்-19 பரிசோதனைகள் செய்வது சுலபமல்ல என்று கூறிய திருமதி பிஜு, அது அவர் களுக்கு அதிகப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார்.
"முதலில் மருத்துவர்கள் உட்பட சக மருத்துவ நிபுணர் குழுவினருடன் அணுக்கமாகச் செயல்பட்டு நோயாளிகளிடம் அதிக நேரம் உரையாட வேண்டும். ஊக்கமும் தைரியமும் ஊட்டி, அவர்களுக்கு நம்பிக்கை வந்த பிறகே மேற்கொண்டு அவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும்," என்று கூறினார் தாதி பிஜு.
மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்ட சில வெளிநாட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றுப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார் திருமதி பிஜு. அனுமதிக்கப்பட்ட இந்திய ஊழியர்களிடம் தமிழில் பேசி, நட்புறவை வளர்த்து, அவர்கள் குணமடைந்து நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப உதவியதில் மிகுந்த திருப்தி அடைந்ததாக தாதி பிஜு சொன்னார்.
சக தாதியருக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் திருமதி பிஜு, தற்போது கர்டின் பல்கலைக்கழக சுகாதாரப் பணித் தலைமைத்துவம் தொடர்பான முதுநிலைப் பட்டப் படிப்பைப் பகுதிநேரமாக மேற்கொண்டவாறு இல்லற வாழ்க்கையையும் சமாளித்து வருகிறார்.
தாம் தாதிமைத் துறையில் கால் பதிக்க மூலக் காரணமாக இருந்தவர் தற்போது மனநலக் கழகத்தில் மூத்த 'மருந்தியல்' தாதியராகப் பணியாற்றும் அவரது 46 வயது அக்கா திருமதி பிந்து என்று திருமதி பிஜு கூறினார்.
நோயாளிகளைப் பராமரிப்பில் அக்கா காட்டிய கடப்பாடே தம்மையும் அவ்வழியில் செல்லத் தூண்டியது என்றும் குறிப்பிட்டார் திருமதி பிஜு. இரு சகோதரிகளுக்கும் அண்மையில் தேசிய தின நீண்டகாலச் சேவைப் பதக்கம் வழங்கப்பட்டது.
இப்படி நோய்ப் பரவலை கட்டுப் படுத்தி, மருத்துவப் பிரிவு சுமூகமாகச் செயல்படுவதை உறுதி செய்து, நோயாளிகளின் மனநலத் தேவைகளையும் பூர்த்தி செய்த தாதி பிஜுவுக்கு இவ்வாண்டின் சுகாதார அமைச்சின் தாதியர் தகுதி விருது வழங்கப்பட்டது.
எதிர்காலத்தில், தாம் பணியாற்றும் மருத்துவப் தனிமைப்படுத்துதல் பிரிவில், நோயாளி பராமரிப் புக்கான மேம்பட்ட தீர்வுகளை உருவாக்கி அவற்றைக் கொள்கைளாகப் பரிந்துரைத்து நடைமுறைப்படுத்துவதே தமது இலக்கு என்று கூறினார் இந்தக் கடமை உணர்வு மிக்க தாதி.
- செய்தி: ப.பாலசுப்பிரமணியம்