மலேசியாவின் பேராக் மாநிலம் ஈப்போ நகரில் உலகத் தமிழ் இசை மாநாடு நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. சிறப்புக்குரிய தமிழ் இசைக் கலையை வளரும் தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் முயற்சியாக ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும் வெற்றித் தமிழர் பேரமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. மாநாட்டில் பாரம்பரிய இசைக் கருவிகளின் கண்காட்சிக்கூடம் திறக்கப்படுகிறது. தமிழ் இசை தொடர்பான ஆவணக் குறும்படம் திரையிடப்படுகிறது.
மாநாட்டு மலருக்குத் தமிழ் இசை தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகளை
worldtamilmusiccon2022@gmail.com என்னும் முகவரிக்கு ஆகஸ்ட் 31க்குள் அனுப்புமாறு மாநாட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. மாநாடு குறித்த தகவல்களுக்கு மாநாட்டுத் தலைவர் டாக்டர் அருள் ஆறுமுகம் கண்ணனை +60-12-500 6161 என்னும் எண்ணிலோ மாநாட்டுத் துணைத் தலைவர் பேராசிரியர் எஸ்.விஸ்வ
நாதனை +601-12-303 4341 என்னும் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.