சிங்கப்பூரில் புதிதாக 14 பேருக்கு கிருமித்தொற்று
சுகாதார அமைச்சின் தகவல்படி, இன்று ஜூன் (15ஆம் தேதி) புதிதாக 14 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்துமே சமூக அளவிலான தொற்றாக வகைப்படுத்தப்படுகிறது.
சமூகத்தில் தொற்று உறுதியான 9 பேர் முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட குழுமங்களுக்கு தொடர்பு உடையவர்கள்.
எஞ்சிய ஐவருக்கு முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பு இல்லை.
பாதிக்கப்பட்ட குழுமங்களுக்கு தொடர்புடைய 9 பேரில், ஐவர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டார்கள்.
எஞ்சிய நால்வருக்கு கண்காணிப்பு பரிசோதனை மூலம் தொற்று உறுதியானது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் எவரும் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்படையவில்லை.
அதேபோல் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களில் எவருக்கும் கிருமித்தொற்று பாதிப்பு இல்லை.
சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,315 ஆக உள்ளது.
கடந்த திங்கள் இரவு நிலவரப்படி, 138 பேர் கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
235 பேர் சமூக தனிமைப்படுத்தும் வளாகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்