ஜெர்மனி: பேரங்காடிகளில் மனித இயந்திரங்கள்
ஜெர்மனியின் பேரங்காடிகளில் வாடிக்கையாளர்களின் தேவையைக் கேட்டு அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுக்க மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ‘பெப்பர்’ என்று பெயரிடப்பட்ட அந்த மனித இயந்திரம், பேரங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
ஜெர்மனியில் இதுவரையிலும் 67,051 பேர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நேற்று 4,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 650 பேர் பலியாகிவிட்டனர். 67,051 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கிருமிப் பரவலைக் குறைக்கும் வகையில் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு ஜெர்மானிய அரசு தன் மக்களுக்கு வலியுறுத்தி வருகிறது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜெர்மனி, செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் அண்மையில் அறிமுகப்படுத்திய ‘ட்ரேஸ்டுகெதர்’ போன்ற செயலியை முன்மாதிரியாகக் கொண்டு அந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படம்: இபிஏ