(காணொளி) வெளிநாட்டு ஊழியர்களுக்காக கொவிட்-19 பற்றி தமிழில் விளக்கம் அளிக்கும் சிங்கப்பூர் மருத்துவர்கள்
கொவிட்-19 நோய்த்தொற்றை குணப்படுத்த முடியுமா?
எனக்கு கொவிட்-19 நோய் வந்தா என்ன நடக்கும்?
நான் தனிமைப்படுத்தப்பட்டால் எனக்கு மருத்துவ கண்காணிப்பு முழுமையாகக் கிடைக்குமா?
இந்த கொவிட் நோய் பற்றிய என்னோட கவலைகளையும் வருத்தங்களையும் நான் யார்கிட்ட பேசி தெளிஞ்சுக்க முடியும்?
கொவிட்-19ஐ நாம் எப்போது முழு கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவர முடியும்?
- இந்தக் கேள்விகளுக்கு அருமையான விளக்கங்களைத் தெளிவான தமிழில் வழங்கியுள்ளனர் சிங்கப்பூர் மருத்துவர்கள் நால்வர்.
மருத்துவர் குமரன் ராசப்பன், மருத்துவர் கபிலன் சொக்கப்பன், டாக்டர் அழகர்சாமி கற்பகவல்லி, மருத்துவர் ஆர். கண்ணன் ஆகிய நால்வரும் அளிக்கும் விளக்கங்கள் கொவிட்-19 பற்றிய நமது அச்சங்களைப் போக்குவனவாகவும் கவலையைக் களைவனவாகவும் இருக்கின்றன.
மேலும், கொவிட்-19 பற்றிய சந்தேகங்கள், வருத்தங்கள் போன்றவை இருந்தால் அவர்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி எண்களைப் பற்றிய விவரமும் இந்தக் காணொளியில் இடம்பெறுகிறது.