சமூகத்தில் 24 பேர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 52 பேருக்கு கிருமித்தொற்று

சமூக அளவில் 24 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக அளவில் 24 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (மே 14) நண்பகல் நிலவரப்படி புதிதாக 52 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தொற்று உறுதியானவர்களில் நால்வருக்கு முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பில்லை.

மற்ற 13 பேர் சாங்கி விமான நிலைய கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள். சிங்கப்பூரில் தற்போதை ஆகப்பெரிய கிருமித்தொற்றுக் குழுமமாக உருவெடுத்துள்ள சாங்கி விமான நிலைய குழுத்தில் இதுவரை மொத்தம் 59 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

சமூகத்தொற்று உறுதியான எஞ்சிய எழுவர் முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.

சமூகத்தொற்று உறுதியான அந்த 24 பேரில் 16 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 28 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களில் 19 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை.

கொவிட்-19
கிருமித்தொற்று
சிங்கப்பூர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!