பிரிட்டனில் ஒரே நாளில் புதிய 100,000 தொற்றுச் சம்பவங்கள்
பிரிட்டனில் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து முதன்முறையாக புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 100,000க்கும் மேற்பட்ட கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த மாதத்துக்கு முன்னர் அங்கு அன்றாட புதிய தொற்று எண்ணிக்கை சராசரியாக 70,000 ஆகத்தான் இருந்தது.
ஆனால் கடந்த ஆறு நாள்களில் ஐந்து நாளில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை 90,000க்கும் அதிகமாக இருந்து வருகிறது.
ஒரே நாளில் 15,000 புதிய ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டன.
இருப்பினும், டெல்டா வகைக் கிருமியுடன் ஒப்பிடுகையில் ஓமிக்ரான் வகைக் கிருமியில் என்று பிரிட்டனிலும் தென் ஆப்பிரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளதை
நிபுணர்கள் நற்செய்தி என்று வருணித்தனர்.
இம்பீரியல் காலேஜ் லண்டன் மேற்கொண்ட ஆய்வில், டெல்டா வகைக் கிருமி தொற்றியவர்களையிட ஓமிக்ரான் தொற்றியவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் சாத்தியம் 40 விழுக்காடு குறைவு என்று கூறப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரான் வகைக் கிருமி தொற்றியவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் அபாயம் 70 முதல் 80 விழுக்காடு குறைவு என்று தெரிய வந்தது.
அதே வேளையில் அதிக அளவிலான ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்களைச் சமாளிக்க பிரிட்டனின் மருத்துவமனைகள் சிரமப்படக்கூடும் என்று அந்நாட்டு அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டனில் கிறிஸ்மசுக்குப் பிறகுதான் கொவிட்-19 தொற்றுக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.