‘டிரேஸ்டுகெதர்’ வருகைப்பதிவு முறை முன்கூட்டியே கட்டாயமாகிறது
கட்டாய 'டிரேஸ்டுகெதர்' வருகைப் பதிவு முறை இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இம்மாதம் 17ஆம் தேதியே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த வருகைப் பதிவு முறை ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கப்படுவதாக இருந்தது,” என்றார் அமைச்சர் லாரன்ஸ் வோங்.
இப்புதிய நடவடிக்கை 'சேஃப்என்ட்ரி' வருகைப்பதிவு முறையைப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் அமல்படுத்தப்படும்.
கடைத்தொகுதிகள், வேலையிடங்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள், கல்வி நிலையங்கள், அமர்ந்து உண்ணும் உணவு, பானக் கடைகள், உடற்பயிற்சிக்கூடங்கள் ஆகியன அந்த இடங்களில் அடங் கும்.
டிரேஸ்டுகெதர் தவிர இதர வருகைப் பதிவு முறைகளான கைபேசி அல்லது சிங்பாஸ் செயலி மூலம் ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்தல் ஆகியவற்றை இம்மாதம் 17ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியாது.
இருப்பினும், மேற்குறிப்பிட்ட இடங்களில் அடையாள அட்டையில் உள்ள ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்தல் இம்மாதம் 31ஆம் தேதி வரை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.