‘டிரேஸ்டுகெதர்’ வருகைப்பதிவு முறை முன்கூட்டியே கட்டாயமாகிறது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கட்டாய 'டிரேஸ்டுகெதர்' வருகைப் பதிவு முறை இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இம்மாதம் 17ஆம் தேதியே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த வருகைப் பதிவு முறை ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கப்படுவதாக இருந்தது,” என்றார் அமைச்சர் லாரன்ஸ் வோங்.

இப்புதிய நடவடிக்கை 'சேஃப்என்ட்ரி' வருகைப்பதிவு முறையைப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் அமல்படுத்தப்படும்.

கடைத்தொகுதிகள், வேலையிடங்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள், கல்வி நிலையங்கள், அமர்ந்து உண்ணும் உணவு, பானக் கடைகள், உடற்பயிற்சிக்கூடங்கள் ஆகியன அந்த இடங்களில் அடங் கும்.

டிரேஸ்டுகெதர் தவிர இதர வருகைப் பதிவு முறைகளான கைபேசி அல்லது சிங்பாஸ் செயலி மூலம் ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்தல் ஆகியவற்றை இம்மாதம் 17ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியாது.

இருப்பினும், மேற்குறிப்பிட்ட இடங்களில் அடையாள அட்டையில் உள்ள ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்தல் இம்மாதம் 31ஆம் தேதி வரை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

#கொவிட்-19 #டிரேஸ்டுகெதர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!