சென்னை: ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங் கள் நாடாளுமன்றத் தேர்தல் வாக் குப் பதிவு நேற்று காலை தொடங் கிய நிலையில் தாங்களும் வாக் களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக் கினைப் பதிவு செய்தார். அனை வரும் தங்களது வாக்கினைத் தவறாமல் பதிவு செய்யவேண்டும் என்று வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்த நிலையில், நடிகர் விஜய் நீலாங் கரையில் உள்ள பள்ளியில் மக்க ளோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர் களிடம் கூறுகையில், "நல்லது நடக்கும் என அனைவரையும் போல நம்பிக்கையுடன் காத்திருக் கிறேன். மக்களிடம் அரசியல் குறித்த அறிவு, விழிப்புணர்வு அதிகம் இருப்பது பாராட்டுக் குரியது," என்றார்.
சென்னை கோடம்பாக்கம் அரு கில் உள்ள சாமியார் மடம் வாக்குச் சாவடியில் வாக்களித்த ஏ.ஆர். ரஹ்மான், டுவிட்டர் பதிவில், "நான் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். நீங்கள்?" என்று கேள்வி கேட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம் பேட்டையில் உள்ள பள்ளியில் வாக்கினைப் பதிவு செய்தார். முன்னதாக அங்கு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்துவிட்டுச் சென்றார்.