பெங்களூரு: தான் மீண்டும் அர சியலுக்கு வர நேர்ந்த காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி யின் தலைவரும் முன்னாள் பிரத மருமான தேவேகவுடா.
தும்கூர் நாடாளுமன்றத் தொகுதியில், பாஜக வேட்பாளர் ஜிஎஸ் பசவராஜை எதிர்த்துப் போட்டியிட்ட இவர், "அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தேன்.
"ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அரசியலில் தொடர வேண்டியதாகிவிட்டது.
"இந்தத் தேர்தலில்கூட நான் போட்டியிட விரும்பாமல் ஹாசன் தொகுதியை எனது பேரனுக்கு விட்டுக்கொடுத்தேன். கட்சியினர் கேட்டுக்கொண்டதால் தும்கூரு வில் போட்டியிடுகிறேன்.
"பாஜக மூத்த தலைவர் அத்வானியைப் போல அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.
"உயிருள்ளவரைக் கட்சியை வளர்க்க போராடுவேன். விரை வில் கட்சி அலுவலகம் கட்ட வேண்டும் என முடிவெடுத்திருக் கிறேன்.
"அரசியலில் எந்தப் பதவியை யும் அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. குமார சாமி விருப்பப்படுவதைப் போல மீண்டும் பிரதமராக எனக்கு விருப்பம் இல்லை.
"எங்கே மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிடுவாரோ என்பது தான் என் கவலை. இதைப் பிரதமரின் முகத்தைப் பார்த்துச் சொல்லும் அளவுக்கு எனக்குத் தைரியம் உள்ளது.
"ஆனால், ராகுல் காந்தி பிரத மராக வந்தால் நான் அவருக்குப் பக்கபலமாக இருப்பேன்.
"சிறிய கட்சியாக இருந்த போதும் சோனியா காந்தி எங் களை ஆதரித்துக் கர்நாடகாவில் மஜத ஆட்சி அமைக்க உதவி னார். அதற்கு நன்றிக்கடனாக ராகுல் காந்தி பிரதமராக உதவு வேன்.
"மாநில கட்சிகளின் பங்களிப் புடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது," என்று தெரிவித்தார்.
கடந்த 18ஆம் தேதி நடை பெற்ற இரண்டாம் கட்ட நாடாளு மன்றத் தேர்தலின்போது கர்நாட காவும் வாக்களித்தது.
தேவகவுடா: மீண்டும் மோடி பிரதமராகி விடுவாரோ என்பதுதான் என் கவலை
21 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Apr 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!