புதுடெல்லி: தேர்தல் தோல்விக்குப் பொறுப்பான நிர்வாகிகள் மீது 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றது. இந்தப் படுதோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பான நிர்வாகிகள் மீது அடுத்த 10 நாட்களில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.