சென்னை: உரிமைப்படி தமிழகத் திற்கு வழங்க வேண்டிய நீரை தொடர்ந்து வழங்கவேண்டும் என கர்நாடக அரசுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்பதற்காக கர்நாடகா அரசு அங்குள்ள அணைகளின் நீர் இருப்பைக் குறைத்து காட்டுவ தாகக் குற்றம்சாட்டி உள்ள அவர், சுமார் 500 ஏரிகளில் தண்ணீரை நிரப்பி, அதைக் கணக்கில் காட் டாமல் மறைக்கும் மோசடி முயற்சி யில் அம்மாநில அரசு ஈடுபட் டுள்ளதாவும் சாடியுள்ளார்.
"கடந்த 5ஆம் தேதி நிலவரப்படி கர்நாடகா அணைக ளின் நீர் இருப்பு 56.81 டிஎம்சி ஆகும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு தமிழகத்திற்கு கிடைத் துள்ள தண்ணீரின் அளவு 14 டி.எம்.சி. க்கும் குறைவுதான். "எனவே கர்நாடகாவில் உள்ள அணைகளில் குறைந்தது 43 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண் டும். ஆனால், செவ்வாய் நிலவரப் படி கர்நாடக அணைகளில் 26.17 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் இருப் பதாக அம்மாநில அரசின் இணையத் தளங்களில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது," என ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
அப்படியானால், மீதமுள்ள 17 டிஎம்சி தண்ணீர் என்னவானது என்ற கேள்விக்கு கர்நாடகம் பதிலளிக்க வேண்டுமென வலியு றுத்தியுள்ள அவர், கர்நாடகா அர சின் செயல்பாடு இந்திய அரசியல மைப்புச் சட்டத்தையும் கூட்டாட்சி, தேசிய ஒருமைப்பாட்டுத் தத்துவத் தையும் அவமதிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார். "தமிழகத்திற்கு நீர் வழங்க கர்நாடக அரசு மறுத்தால், அம்மாநில முதல்வர் 'கனத்த இதயத்துடன்' சில செயல்களை செய்வதைப் போல மத்திய அரசும் 'கனத்த இதயத்துடன்' சில நடவடிக்கைகளை எடுக்க வேண் டும். அவற்றுள் அரசியலமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கர்நாடக அரசைக் கலைப்பதும் ஒன்றாக இருக்க வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது," என ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.