சென்னை: தமிழகத்தில் விளை நிலங்களின் பரப்பு குறைந்திருப்பது இம்மாநிலத்தை ஆட்சி செய்த வர்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித் துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், காமராஜர் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு கடந்த ஐம்பது ஆண்டுகளில் சொல்லிக்கொள் ளும்படியாக எந்த ஒரு பாசன திட்டமும் தமிழகத்தில் செயல் படுத்தப்படவில்லை எனச் சுட்டிக் காட்டி உள்ளார். வேளாண் வளர்ச்சியின் மூலமாக மட்டுமே தமிழகம் நீடித்த, நிலையான வளர்ச்சியை அடைய முடியும் என்றும் இதை பாமக உறுதியாக நம்புகிறது என்றும் ராமதாஸ் திட்டவட்டமாகக் குறிப் பிட்டுள்ளார்.
"இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழு நிதி உதவியுடன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நடத்திய ஆய்வின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டு இருக்கின்றன. "கடந்த 1971ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை யிலான 44 ஆண்டுகளில் தமிழகத்தின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைக் கோள் படங்களின் உதவியுடன் இந்த ஆய்வு நடத் தப்பட்டு இருக்கிறது," என ராம தாஸ் கூறியுள்ளார்.
இந்த ஆய்வின் மூலம் வேளாண் விளைநிலங்களின் பரப்பளவு 6 ஆயிரத்து 601 சதுர கிலோ மீட்டரில் இருந்து 4 ஆயிரத்து 806 சதுர கிலோ மீட்டராக குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், விளை நிலங்களின் பரப்பளவு முன்னை விட 27 விழுக்காட்டுக்கும் கூடுத லாகக் குறைந்து இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளார். "தமிழகத்தின் பாசன பரப்பு கணிசமாக குறைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, காமராஜர் ஆட்சிக் காலம் வரை காவிரிப் பிரச்சினையோ, முல்லை பெரியாறு சிக்கலோ, பாலாற்று அணை விவகாரமோ எழவில்லை என்ப தும் குறிப்பிடத்தக்கது. "எனவே வேளாண் வளர்ச்சியே தமிழகத்துக்கு நிலையான வளர்ச் சியைத் தரும்," என ராமதாஸ் மேலும் வலியுறுத்தி உள்ளார்.