தஞ்சை: புத்தாண்டுக் கொண்டாட் டத்தின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரண மாக தஞ்சை அருகே உள்ள ஆம்பலாபட்டு பகுதியில் பதற்றம் நிலவியது. அங்கு நிகழ்ந்த வன்முறையில் பத்து வீடுகள் சூறையாடப்பட்டன. ஆம்பலாபட்டு அருகே உள்ள குடிக்காட்டுப் பகுதியில் குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்த இளையர்கள் புத்தாண்டுக்கு முந்தைய தினம் இரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் கோபமடைந்தனர்.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட இளையர்கள் இரும்புக் கம்பி, அரிவாள், கடப் பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களுடன் குடிக்காட்டுப் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் புத்தாண்டு கொண்டாடிய இளையர்களுக்கு சரமாரியாக அடி விழுந்தது. ஆயுதங்களுடன் வந்த தரப்பினர் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
மேலும் குடிநீர்க் குழாய்களை உடைத்து வீசிய அக்கும்பல், கண் ணில் பட்டவர்களை எல்லாம் தாக் கினர். 10 வீடுகள் சூறையாடப்பட் டன. இதையடுத்து அங்கு போலிசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்ற உறுதியும் அளிக்கப் பட்டுள்ளது.
உடைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் முன்பு பாதிக்கப்பட்டவர்கள். படம்: தகவல் ஊடகம்.