கோயம்புத்தூரில் உள்ள ஆர்எஸ் புரம் காவல் நிலையம் இந்தியாவி லேயே சிறந்தது என்பதற்கான விருதை அந்நாட்டின் உள்துறை அமைச்சிடம் இருந்து பெற்றுள்ளது. விவேக காவல் நிலையம் என் னும் பட்டியலுக்கான விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்னை அண்ணா நகர், கோவை ஆர்எஸ் புரம் காவல் நிலையங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ஆர்எஸ் புரம் இந்திய அளவில் முதல் இடத்துக்குத் தேர்வானது. அதற் கான விருதை மாநில தலைமை போலிஸ் அதிகாரி டிகே ராஜேந் திரனும் ஆர்எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளர் டி ஜோதியும் பெற்றுக்கொண்டனர்.
உள்துறை அமைச்சின் தேர்வுக் குழு இரு மாதங்களுக்கு முன்னர் இந்த காவல் நிலையத்துக்கு வந்து பார்வையிட்டது. களவுபோன பொருட்களை மீட்ட விகிதம், சுகா தாரம், மழைநீர் சேகரிப்பு போன்ற வற்றில் இந்தக் காவல்நிலையம் தலைசிறந்து இருந்ததைக் குழு கவனித்தது. இரண்டாவது இடத்தை தெலுங் கானா மாநிலத்தின் பஞ்சகட்டா காவல் நிலையமும் அதற்கடுத்த இடத்தை உத்தரப் பிரதேச மாநிலம் குடும்பா காவல் நிலையமும் பிடித் துள்ளன. ஐந்தாவது இடமும் தமிழ் நாட்டுக்குத்தான் கிடைத்துள்ளது. சென்னை அண்ணா நகர் காவல் நிலையம்தான் அந்த ஐந்தாமிடம்.