திண்டுக்கல்: மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், திண்டுக் கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் மத்திய அரசு ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளது. எனவே இங்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட் டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 46 இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் நீர்வள அமைச் சகம் முடிவு செய்துள்ளது என்றும், இதற்காக பல்வேறு கிராமங்களில் இதுவரை 26 இடங்களில் ஆழ் துளை கிணறுகள் அமைக்கப்பட் டுள்ளதாகவும் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பட்டிவீரன்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதை நாம் தமிழர் கட்சியி னர் தடுத்து நிறுத்தியுள்ளனர். "பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யவே கிணறுகள் அமைப்பதாகக் கருதி னோம். ஆனால் பணிகள் முடிந்த பின்னர், அந்தக் கிணறுகளைப் பூட்டிவிட்டனர். அப்படியானால் எதற்காக கிணறுகள் தோண்டப் பட்டனா?" என்று நாம் தமிழர் கட் சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தடுத்து நிறுத்திய நாம் தமிழர் கட்சியினர். படம்: தமிழக ஊடகம்