திருமலை: திருப்பதி ஏழுமலை யான் ஆலயத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கடந்த சில நாட்களாக தேவஸ்தானத்தின் மீது குற்றச் சாட்டுகளைக் கூறி வருகிறார். மாயமான ரூ.500 கோடி மதிப்புள்ள வைரக்கல் ஜெனி வாவில் ஏலத்தில் விடப்பட்டுள்ள தாகவும் லட்டு தயாரிப்புக் கூடம் தோண்டப்பட்டு பழங்கால ஆபரண நகைகள் எடுக்கப்பட் டுள்ளதாகவும் கூறிவருகிறார். இந்தத் தகவல்களால் ஆந்திர மக்களும் பக்தர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து நகை மாயம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த புகாருக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் மறுப்பு தெரிவித்து விளக்க மளித்தார். இந்நிலையில் ஆந்திர முதல் வர் சந்திரபாபு நாயுடு அமரா வதியில் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் சுதாகர் யாதவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தி, உண்மை நிலையைக் கேட்டறிந்தார்.