வால்பாறை: தன் மகளைக் கடித்த சிறுத்தையைத் தாய் அடித்து விரட்டிய சம்பவம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது. ஆலங்குளத்தைச் சேர்ந்த முத்துமாரி (42 வயது) வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மகள் சத்யா 5ஆம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமாரியின் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் சிறுமி சத்யாவின் கழுத்தைக் கடித்து இழுத்துச் சென்றது.
இதைக் கண்டு பதறிப்போன முத்துமாரி சட்டென அங்கிருந்த விறகுக் கட்டையை எடுத்து சிறுத்தையின் தலையில் பலமாகத் தாக்கி யுள்ளார். இதையடுத்து சத்யாவை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது சிறுத்தை. படுகாயமடைந்த சிறுமி சத்யா பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகளைக் காப்பாற்றவேண்டும் என்ற பதைபதைப்பில் சிறுத் தையை ஆவேசத்துடன் தாக்கியதாக முத்துமாரி தெரிவித்துள் ளார். அவரது தைரியத்தைப் பலரும் பாராட்டியுள்ளனர்.