காற்று மாசு; டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை

புதுடெல்லி: டெல்லியில் கடுமை யான காற்றுத் தூய்மைக்கேடு நிலவுவதால் கட்டுமானப் பணி களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது புழுதிப் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் தற்போது முன்னெப்போதும் இல் லாத அளவுக்கு காற்றுத் தூய்மை கேடு குறியீடு மிகவும் அபாயகர மான 801ஐ எட்டியுள்ளது.

இதன் காரணமாக, டெல்லி யின் வெப்பநிலையும் 40 டிகிரியை எட்டிவிட்டது. டெல்லியின் இச்சூழலைச் சமாளிக்க ஆங்காங்கே தண்ணீர் தெளிக்கப்பட்டாலும் கொட்டித் தீர்க்கும் மழை ஒன்றே தீர்வு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு நிலவுவதால் வரும் 17ஆம் தேதி வரை கட்டுமான பணிகளுக்குத் தடை விதித்து ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.

காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக எதிர்செல்லும் வாகனங்கள் தெளிவாக புலப்படாததால் டெல்லி சாலையில் போக்குவரத்து நிலைகுத்தியது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!