புதுடெல்லி: டெல்லியில் கடுமை யான காற்றுத் தூய்மைக்கேடு நிலவுவதால் கட்டுமானப் பணி களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது புழுதிப் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் தற்போது முன்னெப்போதும் இல் லாத அளவுக்கு காற்றுத் தூய்மை கேடு குறியீடு மிகவும் அபாயகர மான 801ஐ எட்டியுள்ளது.
இதன் காரணமாக, டெல்லி யின் வெப்பநிலையும் 40 டிகிரியை எட்டிவிட்டது. டெல்லியின் இச்சூழலைச் சமாளிக்க ஆங்காங்கே தண்ணீர் தெளிக்கப்பட்டாலும் கொட்டித் தீர்க்கும் மழை ஒன்றே தீர்வு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு நிலவுவதால் வரும் 17ஆம் தேதி வரை கட்டுமான பணிகளுக்குத் தடை விதித்து ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.
காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக எதிர்செல்லும் வாகனங்கள் தெளிவாக புலப்படாததால் டெல்லி சாலையில் போக்குவரத்து நிலைகுத்தியது. படம்: ஏஎஃப்பி