இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி கிட்டத்தட்ட ஏழு விழுக்காடாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019-2020 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்ற முன்னுரைப்புகளை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், அடுத்த 2020 நிதியாண்டில் பொருளியல் அதிக வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளியலாக உருமாறும்போதும் அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 8 விழுக்காடு ஆக உயரும் சாத்தியம் அதிகமுண்டு எனக் கூறப்படுகிறது.