உலகின் கோதுமை தட்டுப்பாட்டை தணிக்கவிருக்கும் இந்தியா

உக்ரேனுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையே நிலவும் பூசலால் உலகெங்கும் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மற்ற நாடுகளுக்குக் கோதுமையை இறக்குமதி செய்ய இந்தியா தயாராகிவருகிறது.

உலகில் ஏற்றுமதியாகும் கோதுமையில் 29 விழுக்காடு ர‌ஷ்யா உக்ரேன் ஆகிய இரண்டு நாடுகளிலிருந்து வருகிறது. ஆனால் பூசல் காரணமாக உக்ரேனிலிருந்து கோதுமையைக் கொண்டுவர இயலவில்லை. ர‌ஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டிருப்பதால் அங்கிருந்தும் கோதுமையை இறக்குமதி செய்யமுடியாது.

அதனால் பிலிப்பீன்ஸ், எகிப்து, லெபனான், மொரோக்கோ ஆகிய நாடுகளிலிருந்து கோதுமையைத் தருவிக்க மற்ற நாடுகள் ஏற்பாடு செய்துவருகின்றன.

இந்தப் பட்டியலில் சேர்ந்துகொள்ள இந்தியா ஆயத்தமாகி வருகிறது.

உலகின் இரண்டாவது ஆகப்பெரிய கோதுமை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் 108 மில்லியன் டன் கோதுமை விளைகிறது. ஆனால் உலகின் மொத்த கோதுமை இறக்குமதியில் ஒரு விழுக்காடு கூட இந்தியாவிலிருந்து வருவதில்லை.

உக்ரேன்-ர‌ஷ்யப் போர் நீடித்தால், இந்தியாவிலிருந்து கோதுமை பெரியளவில் ஏற்றுமதி செய்யப்படலாம் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.

ஏற்கனவே இந்தியாவில் இவ்வாண்டு அளவுக்கு அதிகமாக கோதுமை இருப்பதால், இந்த ஆண்டு சுமார் எட்டு டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!