‘ஹிஜாப் அணிந்து வந்தால் தேர்வு எழுத முடியாது’

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் ஹிஜாப் அணிந்து வந்த மாண­வி­கள் பத்­தாம் வகுப்பு தேர்வு எழுத அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை எனத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இந்­நி­லை­யில், ஹிஜாப் அணிந்த மாண­வி­கள் தேர்­வெ­ழுத அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள் என கர்­நா­டக அரசு திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

கர்­நா­ட­கா­வில் உள்ள பள்ளி, கல்­லூ­ரி­களில் மாண­வி­கள் ஹிஜாப் உள்­ளிட்ட மத அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்­தும் ஆடை­களை அணிந்து வர மாநில அரசு தடை விதித்­தது. அர­சின் இந்த உத்­த­ரவு செல்­லும் என பெங்­க­ளூரு உயர் நீதிமன்­ற­மும் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், கர்­நா­ட­கா­வில் நேற்று பத்­தாம் வகுப்­புக்­கான பொதுத்­தேர்­வு­கள் தொடங்­கின. நேற்று ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாண­வி­கள் தேர்வு அறைக்­குள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில் ஹிஜாப் தொடர்­பான உயர் நீதி­மன்­றத் தீர்ப்பை மீறும் எவ­ரும் தேர்வு எழுத அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்கள் என்று கர்­நாடக கல்­வித்­துறை அமைச்­சர் பி.சி.நாகேஷ் தெரி­வித்­துள்­ளார். அரசு விதி­களை மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!