பெங்களூரு: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் இலவசச் சேவை வழங்குவதாக அம்மாநில மாநகராப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தினம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விபத்தை ஏற்படுத்தாத பேருந்து ஓட்டுநர், சிறப்பான நடத்துநர் உள்ளிட்ட 150 பேருக்குத் தங்கப்பதக்கம் வழங்கப்படவுள்ளது.
நாளை சுதந்திர தினத்தில் அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் இலவசச் சேவையைப் பெறலாம்.
இதனையடுத்து பெங்களூருவில் உள்ள சுற்றுலாத் தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் மக்கள் அதிகமாக வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.