மெகபூப்: தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் சாலை, ரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில் ரூ.13,500 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் மெகபூப் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், தெலுங்கானாவில் மக்கள் பாஜக ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடி பங்கேற்ற அதிகாரபூர்வ நிகழ்ச்சியில் மாநில முதல்வர் கே.சந்திர சேகரராவ் கலந்துகொள்ளவில்லை.