மும்பையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல்

மும்பை: மும்பை நகரில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் முக்கிய ஆறு இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று மும்பை போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை பின்னிரவு ஒரு தகவல் வந்ததாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்தத் தகவல் பாகிஸ்தானில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மும்பையின் விமான நிலையம் உள்ளிட்ட பல முக்கியமான பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்று காவல்துறை வலைபோட்டு தேடி வருகின்றனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மும்பை விமான நிலையங்களிலும், மும்பையில் உள்ள பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த மிரட்டல் பதிவை வெளியிட்டவர் யார் என்பதை கண்டறியும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!