மும்பை: மும்பை நகரில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் முக்கிய ஆறு இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று மும்பை போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை பின்னிரவு ஒரு தகவல் வந்ததாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்தத் தகவல் பாகிஸ்தானில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மும்பையின் விமான நிலையம் உள்ளிட்ட பல முக்கியமான பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்று காவல்துறை வலைபோட்டு தேடி வருகின்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மும்பை விமான நிலையங்களிலும், மும்பையில் உள்ள பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த மிரட்டல் பதிவை வெளியிட்டவர் யார் என்பதை கண்டறியும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.