அனைத்துலக மகளிர் தினத்தன்று ரயில் பெட்டியில் ஆடவர் ஒருவருடன் இரண்டு பெண்கள் சூடாக விவாதிப்பதாக அமைந்த காணொளி ஒன்று, அண்மையில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பெண் அந்த ஆடவரின் சட்டைக் கழுத்துப்பட்டையை இறுகப் பற்றியிருந்தார்.
சுற்றியுள்ளவர்கள் வேடிக்கை பார்க்க, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு அந்தப் பெண்ணின் மகள் என நம்பப்படும் இன்னொரு பெண், அந்த வாக்குவாதத்தில் சேர்ந்து கொண்டார்.
சண்டையைக் காட்டும் காணொளியைப் பதிவேற்றம் செய்திருந்த இணையவாசி ஒருவர், இருக்கை விவகாரத்தால் அந்தச் சண்டை மூண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, ரயிலின் அமைப்பை மாற்றி அமர்வதற்காக நாற்காலிகளைப் போட்டால் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும் என்று ஓர் இணையவாசி கருத்து பதிவிட்டார்.
ஒருவரது கழுத்துப்பட்டையைப் பற்றுவது தவறு என்று மற்றொருவர் சுட்டினார்.
இந்நிலையில், அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளையும் இந்தக் காணொளியைப் பார்த்த சிலர் பதிவிட்டனர்!