இந்தியா

லக்னோ: நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் களமிறங்கியுள்ள ராகுல் காந்தி, 2-வதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கேரளா மற்றும் தமிழகத்தில் இவ்வாண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யாவுக்கு (44 வயது) எதிராக லாலு பிரசாத் யாதவ் என்ற வேட்பாளர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
தெலுங்கானா: தெலுங்கானாவை சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா. இவர் கின்னரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர்களில் எஞ்சியிருப்பவர். கின்னாரா என்பது வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியாகும்.
கோல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்து ஆளுநர் மாளிகையில் தங்குவதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.