அருள்மிகு வேல்முருகன் ஞான முனீஸ்வரர் ஆலயத்தின் இரண்டாவது மகா குடமுழுக்கை முன்னிட்டு நிதி திரட்டும் வகையில் 'சிவஞானமுனீஸ்வரர்' என்னும் தலைப்பில் பக்திப்பாடல்களைக் கொண்ட இசைவட்டு ஒன்று வெளியிடப்பட்டது. பிஜிபி கல்யாண மண்டபத்தில் 18.9.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு திரு ஜோதி மாணிக்கத்தின் தலைமையில் இந்த இசைவட்டு வெளியீட்டு விழா நடைபெற்றது. முன்னணிப் பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மாணிக்க விநாயகம் ஆகியோருடன் வேல்முருகன், திருவனந்தபுரம் சகோதரிகள், கிருஷ்ணராஜ் ஆகியோர் பாடிய பக்திப்பாடல்களைக் கொண்ட 'சிவஞானமுனீஸ்வரர்' இசைவட்டு 10 வெள்ளிக்கு செங்காங், ரிவர்வேல் கிரசெண்ட்டில் அமைந்துள்ள அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தில் கிடைக்கும்.
இசைவட்டு வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட (இடமிருந்து) திருமதி அமிர்தம் அம்மாள், தலைவர் திரு ஏ.ஜே.பால், துணைத்தலைவர் டாக்டர் சண்முகநாதன், சிறப்பு விருந்தினர் திரு ஜோதி மாணிக்கவாசகம், கயல்விழி, திருமதி மலர்விழி, திருமதி வாசுகி ஆகியோர். படம்: அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம்