கொவிட்-19 சூழல் காரணமாக பலர் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர்.
இவ்வாண்டு அந்நிலவரம் மாறப்போவதாகவும் தெரியவில்லை. இதன் அடிப்படையில், வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் உடல் வலிகளால் பலர் துன்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகையோருக்கு முதுகு, கழுத்து போன்ற இடங்களில் வலி ஏற்படுவது வழக்கம். ஆனால், எதிர்பாரா விதமாக பலருக்கும் இப்போது பாதம் தொடர்பான பல பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறை கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கியதிலிருந்து பாத வலி அதிகரித்துள்ளதாக எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இதுபோன்ற பிரச்சனைகளின் எண்ணிக்கை இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார் மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவ
மனையின் டாக்டர் விக்டர் சியா. அதே சமயம், வேலை பார்ப்பவர்
களுக்கிடையே இப்பிரச்சனைகள் ஏறத்தாழ பத்திலிருந்து பதினைந்து விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் டாக்டர் கெவின் கூ குறிப்பிட்டுள்ளார்.
பாத வலி கொண்ட நோயாளிகளின் அதிகரிப்பை 'ராபிட் ஃபிசியோகேரின்' மூத்த தலைமை இயன் மருத்துவ நிபுணரான திரு ஜான் ஆப்ரஹாமும் கவனித்துள்ளார்.
ஏன் பாத வலி ஏற்படுகிறது?
சரியான காலணிகளை அணியாமல் கயிற்றாட்டம் ஆடுவது, தவறான காலணிகளை அணிந்து கொண்டு நீண்ட தூரத்திற்கு நடப்பது போன்ற நடவடிக்கைகளை ஒருவர் புதிதாக தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் சேர்த்துக்கொள்வது அல்லது திடீரென்று சில நடவடிக்கைகளின் தீவிரத்தை அதிகரிப்பதே பெரும்பாலான பாத வலிகளுக்குக் காரணங்களாக இருக்கலாம் என்று 'கோர் கான்செப்ட்ஸின்' மூத்த தலைமை இயன் மருத்துவ நிபுணரான திரு சங் சய் துவான் கூறியுள்ளார்.
'ப்லான்டர் ஃபாசியைடிஸ்' எனப்படும் பாத வளைவு வலியே
காலணிகள் அணியாமல் வீட்டில் நடப்பதால் ஏற்படக்கூடிய வலிக்கான முக்கிய காரணமாகும் என்று 'ஐலண்ட் ஆர்த்தோபீடிக்ஸ் குரூப்பின்' மூத்த ஆலோசக எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் கௌரீசன் தேவேந்திரன் குறிப்பிடுகின்றார்.
'ப்லான்டர் ஃபாசியா', பாதத்தின் வளைவிற்கு ஆதரவு அளித்து, அதிர்வுகளைத் தாங்கி, குதிகாலை காலின் முன்பகுதியோடு
இணைக்கும் தசையாகும்.
காலணிகள் அணியாமல் நடப்பது பாதங்களுக்கு எவ்வித ஆதரவையும் அளிக்காது என்பதால், 'ப்லான்டர் ஃபாசியைடிஸ்' இருக்கின்றவர்கள் மரம் மற்றும் கான்கிரீட் போன்ற தரைகளில் நீண்ட நேரங்களுக்கு காலணிகள் அணியாமல் நடப்பதை தவிர்க்குமாறு பல நிபுணர்கள் பரிந்துரைப்பதாகக் குறிப்பிடுகின்றார் டாக்டர் சியா. மேலும், சரியான காலணிகள் பாதங்களுக்கும் பாத வளைவு
களுக்கும் அதிக ஆதரவை அளிக்கக்கூடியவையாக அமைகின்றன என்று அவர் கூறினார்.
அதோடு, தட்டையான பாதங்
களையும் தாழ்வான பாத வளைவு களையும் கொண்டவர்களுக்கு குதிகாலிலும் பாத தசைகளிலும் அதிக அழுத்தம் ஏற்படலாம் என்று குறிப்பிடுகின்றார் திரு அப்ரஹாம்.
மேலும், கால் ஆணிகள், நியூரோமா எனப்படும் நரம்புக்கட்டி மற்றும் கண்டறியப்படாத முடக்கு வாதம் போன்றவையும் வலியை ஏற்படுத்தக்கூடியவையாக
அமைகின்றன என்று அவர் கூறினார். தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும்போது ஒருவரை துன்பப்படுத்தும் இதுபோன்ற வலிகள் முன்பு வேலைக்கு சென்றபோது செய்த தவறுகளின் விளைவு
களாகவும் இருக்கக்கூடும்.
'ஹை ஹீல்' வகை காலணிகளை அடிக்கடி அணியும் பல பெண்களுக்கு சுருக்கப்பட்ட குதிகால் தசைநார் அல்லது இறுக்கமான கெண்டைக்கால் தசை இருக்கின்றது என்று டாக்டர் கூ தெரிவித்தார். இது 'ப்லான்டர் ஃபாசியா' தசையின்மிது மேலும் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்தி 'ப்லான்டர் ஃபாசியைடிஸ்' உருவாகுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
வெறும் காலில் நடப்பது
பாதங்களுக்கு நல்லதா?
காலணிகள் அணியாமல் வெறும் காலில் நடப்பது தசைகளை துடிப்பாக வைத்திருக்கும் என்றும், கால் தரையில் படும்போது நம்மை சம நிலையில் வைத்திருப்பதற்காக நம் பாதங்களில் உள்ள தசைகள் அதிகமாக வேலை பார்க்கும் என்றும் திரு சங் குறிப்பிட்டார். மேலும், அது இடுப்பு, முட்டி போன்ற மூட்டு களையும் மேம்படுத்தக்கூடும் என்று திரு கூ குறிப்பிட்டார்.
ஆனால், தட்டையான பாதம் போன்ற பாதப்பிரச்சனைகள் உள்ள ஒருவருக்கு முன்பே 'நோன் ஆப்டிமல் கெயிட் மெகானிக்ஸ்' போன்ற பிரச்சனைகள் இருந்தால், வெறும் காலில் அளவுக்கு அதிகமாக நடப்பது அவரின் பாதங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி சில இடங்களில் வலியை உண்டாக்கக்கூடும்.
நீங்கள் என்ன செய்யலாம்?
'ப்லான்டர் ஃபாசியைடிஸாக' இருந்தால், வலி அதிகமாக இருக்கும் முதல் சில நாட்களுக்குப் பிறகு நீங்கள் நடந்தவாறு 'ப்லான்டர் ஃபாசியாவை' சரிப்படுத்தினால் வலி குறையும்.
மேலும், டாக்டர் கௌரீசன் பரிந்துரைக்கும் ஆலோசனையை பின்பற்றி பாத வலியை நீங்கள் குறைத்துக்கொள்ளலாம்:
ஓய்வெடுத்தல்: வலியுடைய பாதத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நன்று. அதிகம் நடப்பதையும் ஓடுவதையும் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
பனிக்கட்டி ஒத்தடம்: வலி ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரம் வரை துணியில் சுற்றப்பட்ட பனிக்கட்டியை பத்து பதினைந்து நிமிடங்களுக்கு வீக்கத்தின்மீது வைக்கவேண்டும்.
வீக்கத்தின் மீது அழுத்தம்
அளித்தல்: வீக்கத்திற்கு போடும் கட்டுத்துணியைப் பாதத்தில் அணிந்துகொள்ளவேண்டும்
படுத்தவாறு காலை தூக்கி
வைக்கவேண்டும்:
வலி குறைவதற்கான மருந்து மற்றும் இயன் மருத்துவ சிகிச்சையுடன் அதிர்வலை மற்றும் அல்ட்ராசவுண்ட் சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் வலி ஓரிரு வாரங்களில் குறைந்துவிடும். அவ்வாறு குறையாவிடில், மருத்துவரைச் சென்று பார்க்குமாறு
பரிந்துரைக்கப்படுகின்றது.