கொவிட்-19 தடுப்பூசி போடுவது தொடர்பான முன்னோட்டத் திட்டத்தை மலேசியா தொடங்கியுள்ளது.
இதை இணையம் வழியாக நடத்தப்பட்ட அறிமுக விழாவில் மலேசிய சுகாதார அமைச்சர் அதாம் பாபா இன்று (ஜனவரி 27) தொடங்கிவைத்தார்.
மலேசியாவெங்கும் உள்ள ஒன்பது மருத்துவமனைகள் இந்தச் முன்னோட்டத் திட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னோட்டத் திட்டத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவின் சுகாதார அமைச்சின் மருந்தக ஆராய்ச்சிப் பிரிவின் கண்காணிப்பின்கீழ் இந்த முன்னோட்டத் திட்டம் நடைபெறும்.
13 மாதங்களுக்கு நடத்தப்படும் இந்த முன்னோட்டத் திட்டத்தில் 3,000 உள்ளூர் தொண்டூழியர்கள் பங்கெடுக்கின்றனர்.