ஈராண்டுகளுக்கு பின்னர் மலேசியாவில் தைப்பூசக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட்-19 கிருமித் தொற்று காரணமாக தைப்பூசத் திருவிழா அதிகக் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
பினாங்கில், புகழ்பெற்ற தங்க, வெள்ளி ரத ஊர்வலங்கள் இன்று காலை தொடங்கின.
தைப்பூசத் திருவிழா வாரயிறுதியில் வருவதால், அதிக எண்ணிக்கையில் பக்தர்களும் பொதுமக்களும் திரளாக வருகையளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இவ்வாண்டு கொண்டாட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசியாவின் வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.