கோலாலம்பூர்: மலேசியாவில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டு அரசாங்கம் அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதை அடுத்து சமூக ஊடகம் வாயிலாக இனக் கல
வரத்தைத் தூண்டும் காணொளிகள் வெளியிடப்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை எதிர்கொள்ள மலேசிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், உச்ச விழிப்பு
நிலையில் இருப்பதாக டிக்டாக் சமூக ஊடகத் தளம் தெரிவித்துள்ளது. வழிகாட்டி நெறிமுறையைக் கடைப்பிடிக்காத, வன்
முறையைத் தூண்டும் காணொளிகளை உடனே முடக்க தயாராக இருப்பதாக அது கூறியது.
"தொடர்ந்து உச்ச விழிப்புநிலையில் இருப்போம். விதிமுறைகளை மீறும் காணொளிகளை உடனடியாக நீக்குவோம்," என்று டிக்டாக் கூறியது.
மலேசியப் பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரசாரக்கூட்டங்கள் நடைபெற்றபோது இனக் கல
வரத்தைத் தூண்டும் வகையில் பல காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் அவை குறித்து மலேசிய அதிகாரிகளிடம் உடனடியாகத் தெரிவித்ததாகவும் டிக்டாக் கூறியது.
தேர்தலில் 73 தொகுதிகளை வென்று ஆட்சி செய்யும் வேட்கையில் இருக்கிறது பெரிக்காத்தான் நேஷனல். இக்கூட்டணியில் பெரும்பாலானோர் மலாய் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கூட்டணிக்கு முகைதீன் யாசின் தலைமை தாங்குகிறார்.
அக்கூட்டணியில் பாஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. தீவிர இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்ட பாஸ் கட்சி இம்முறை பல தொகுதி களை வென்றுள்ளது. இது மலேசிய சீனர்களையும் இந்தியர்களையும் கவலை அடையச் செய்துள்ளது.
அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பானும் அரசாங்கம் அமைக்க முனைப்புடன் உள்ளது. இந்தக் கூட்டணியில் பல இன, பல சமய வேட்பாளர்கள் உள்ளனர். ஹரப்பான் கூட்டணியில் ஜனநாயக செயல் கட்சி அங்கம் வகிக்கிறது. இதில் பெரும்பாலானோர் சீனர்கள். இதன் காரணமாக மலேசியாவின் பெரும்பான்மை இனத்தவர்களான மலாய்க்காரர்களின் ஆதரவு அதற்கு அவ்வளவாக இல்லை.
தேர்தல் முடிந்ததிலிருந்து பல சர்ச்சைக்குரிய டிக்டாக் காணொளி கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மலேசியாவில் உள்ள சமூக ஊடகப் பயனீட்டாளர்கள் புகார் செய்திருந்தனர்.
1969ஆம் ஆண்டில் மலேசியாவில் நிகழ்ந்த இனக் கலவரம் குறித்து அந்தக் காணொளிகள் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கலவரத்தில் ஏறத்தாழ 200 பேர் மாண்டனர். 1969ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சீனர்களின் ஆதரவு பெற்ற எதிர்க்கட்சிகள் கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியதை அடுத்து, கலவரம் வெடித்தது.
இம்முறை அத்தகைய சூழல் ஏற்படக்கூடாது என்பதில் மலேசிய அதிகாரிகள் உறுதியுடன் உள்ளனர்.
1969ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி நிகழ்ந்த இனக் கல
வரம் தொடர்பான 13 காணொளிகளை நீக்கிவிட்டதாக டிக்டாக் கூறியது.
வெறுப்புணர்வைப் பரப்பும் பேச்சு, வன்முறையைத் தூண்டும் தீவிரவாதப் போக்கு ஆகியவற்றை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று டிக்டாக் வலி
யுறுத்தியுள்ளது.
மனதைப் புண்படுத்தும், பாதிக்கும் காணொளிகளைத் தங்கள் பிள்ளைகள் பார்த்ததாகப் பெற்றோர் சிலர் டிக்டாக்கிடம் புகார் அளித்த பிறகு, 13 வயதுக்கும் குறை
வானோரின் டிக்டாக் கணக்குகள் நீக்கப்படும் என்று டிக்டாக் கூறியது. கிட்டத்தட்ட 100 டிக்டாக் காணொளிகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆராய்ந்தது. அதில் சில காணொளிகளில் இளம் மலாய் வீரர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் கத்திகளையும் அரிவாள்களையும் ஏந்திக்கொண்டு அன்வார் இப்ராஹிமின் ஆதர
வாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்
தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 1969 கலவரம் நிகழ்ந்ததற்கான காரணத்தை விளக்கி பலர் காணொளிகளைப் பதிவிட்
டனர்.
மலேசியாவில் உள்ள பல இன மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மலாய்க்காரர்கள் பலர் அழைப்பு விடுத்தனர்.
இனக் கலவரம், வன்முறையைத் தூண்டுவோரை அவர்கள் சாடினர்.
இதற்கிடையே, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரை பொறுமையுடன் இருக்கும்படி மலேசிய
மாமன்னர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மாமன்னரின் அரண்மனைக்கு வெளியே துப்பாக்கி, கேடயம் ஏந்திய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, மலேசியாஎங்கும் உள்ள பிரதான சாலைகளில் அந்நாட்டின் காவல்துறையினர் நேற்று வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
பொது ஒழுங்கைக் கட்டிக்காக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய காவல்துறை தெரிவித்தது.
சாலைகளைப் பயன்படுத்து
பவர்களின் நலன் கருதி உச்ச
வேளைகளின்போது சோதனை நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.