காற்றின் சுழற்சியால் உருவான பெரியதொரு நீர்ச்சுழல் நேற்றுக் காலை சிங்கப்பூரின் கடற்கரையில் தென்பட் டதை பலரும் கண்டு வியந்தனர். காலையில் இடியுடன் மழை தொடங்குவதற்கு சற்று நேரம் முன்னதாக அந்த நீர்ச்சுழல் கடலில் இருந்து எழுந்ததாக கிரண் கிரேவல் என்னும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' வாசகர் குறிப்பிட்டார். படத்தையும் அவர் அனுப்பி வைத்தார். பாத்தாம் கடலோரப் பகுதியிலிருந்து தென்பட்ட அந்த நீர்ச்சுழல் புகைபோக்கி போல காணப்பட்டதாக அவர் சொன்னார். ஆங்கர்வேல் ரோட்டில் இருந்து மற்றொரு வாசகரும் படம் பிடித்து அனுப்பி இருந்தார். நீர்ச்சுழல் சிங்கப்பூரின் கடல் நீர் பகுதியில் அரிதாகத் தோன்றும் ஒன்று என்றும் மிகக் குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கக் கூடியது அது என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரி வித்தது. காற்றின் சுழற்சியால் புகைபோக்கி போன்ற நீர்ச்சுழல் மேல்நோக்கி எழுவதாக அது குறிப்பிடுகிறது. 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' வாசகர் கிரண் கிரேவல் அனுப்பிய படம்.
சிங்கப்பூர் கடலோரம் மேல்நோக்கி எழுந்த நீர்ச்சுழல்
19 Jun 2017 09:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jun 2017 06:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!