தோ பாயோவில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் ஒன்றின் வெற்றுத் தளத்தில் நேற்று அதிகாலை தீ மூண்டதில் சுமார் 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் காயமடைந்த 60 வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். புளோக் 14ஏ லோரோங் 7 தோ பாயோவில் நிகழ்ந்த இந்தச் தீச் சம்பவத்தில் வீசப்பட்ட பொருட்கள் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் எரிவாயு குழாய் ஒன்று சேதமடைந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தீயணைப்புச் சாதனங்களைக் கொண்டு தீயை அணைத்ததாக அப்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அந்த புளோக்கில் இரண்டாவது மாடி யிலிருந்து ஆறாவது மாடி வரை வசிக்கும் சுமார் 50 குடியிருப் பாளர்கள் போலிசாரால் வெளியேற் றப்பட்டனர். சம்பவம் குறித்து அதிகாலை 4.51 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்ட தாக தெரிவித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, இரு தீயணைப்பு வாகனங்களையும் இரு அவசர மருத்துவ வாகனங் களையும் அனுப்பி வைத் தது.
இந்தத் தீச் சம்பவத்தினால் அந்த புளோக்கின் வெற்றுத் தளத்தின் மேற்கூரை சேதமடைந்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் நேற்றுக் காலை 10.30 மணிக்கு அந்த புளோக்கிற்கு சென்று பார்த்தபோது எரிவாயுக் குழாய் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்புப் பலகை கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த நாளிதழிடம் பேசிய குடியிருப்பாளர்கள் அந்த புளோக் முழுதும் மின் தடை, எரிவாயுத் தடை ஏற்பட்டதாகக் கூறினர். நேற்று மாலை 6 மணிக்கு மின்சார, எரிவாயு வசதி கள் வழக்கநிலைக்குத் திரும்பும் என பீஷான்தோ - பாயோ நகர மன்றம் கூறியது.
தீயினால் புளோக் வெற்றுத் தளத்தின் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சோதிக்கும் ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்