சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தமது சகோதரரைப் போன்றவர் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை (படம்) தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று முன்தினம் அவர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் அணிகள் ஏதுமில்லை என்றார். "அதிமுகவில் அனைவருமே சகோதரர்களைப் போல் பழகி வருகிறோம். எல்லோருமே ஓரணியாகத்தான் இருக்கிறோம். அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். அதைக் கட்டிக்காக்கும் வகையில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுகிறோம்," என்றார் தம்பிதுரை. அதிபர் தேர்தலுக்கான நிலைப்பாடு குறித்து கட்சியின் தலைமைக் கழகம்தான் இறுதி முடிவெடுத்தது என்றார் அவர். அதில் சசிகலாவும் ஓர் அங்கமா என செய்தியாளர்கள் கேட்டபோது, அதை ஆமோதிப்பது போல தம்பிதுரை தலையசைத்தார்.
பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு: சகோதரர் என்கிறார் தம்பிதுரை
26 Jun 2017 08:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jun 2017 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!