சிட்னி: தங்களது சம்பளப் பிரச்சினை இன்னும் தீர்க்கப் படாததால் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தைப் புறக்கணிப் பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டுப் போட்டித் தொடர் ஒன்றை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித் துள்ளது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் சங்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீரர்களுக்குச் சம்பளம் வழங்கும் முறையில் திருத்தம் செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு அதே சம்பளம் வழங் கவும், மற்ற உள்ளுர் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை நிறுத்தி அதை வேறு சில முன்னேற்ற காரியங்களுக்குப் பயன்படுத்தவும் திட்டமிட்டது. அதற்கான ஒப்பந் தத்தில் அனைத்து வீரர்களும் கையெழுத்திட கடந்த ஜூன் 30 வரை கால அவகாசமும் அளித் திருந்தது.
ஆனால் அனைத்து வீரர்களும் இதற்கு மறுப்புத் தெரிவித்துக் கையெழுத்திட மறுத்ததை அடுத்து, ஜூலை 1ஆம் தேதி முதல் அனைத்து வீரர்களும் வேலையை இழந்ததாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. எனினும் வீரர்கள் கிரிக்கெட் வாரியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாமல் இனி வர விருக்கும் அனைத்து அனைத் துலகப் போட்டிகளையும் புறக்க ணிக்க இருப்பதாக அறிவித்தனர். இதுவரை வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் ஆஸ்திரேலியா 'ஏ' பிரிவு அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை ரத்து செய்வ தாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. ஆஸ்தி ரேலியா 'ஏ' பிரிவு அணி இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா 'ஏ' பிரிவு அணிகளுடன் முத்த ரப்பு தொடரில் விளையாடுவதாக இருந்தது. இந்தப் பிரச்சினையால் அனைத்துலகப் போட்டியில் விளையாடும் வீரர்கள் உள்ளுர் வீரர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் வேலையை இழந்துள்ளனர்.