ரஜினிகாந்த் வழியே என் வழி - அரசியல் பற்றி ராதிகா

அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்த் வழியே என் வழி என பழனியில் நடிகை ராதிகா தெரிவித்தார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலம்தான் தனது அரசியலுக்கு வருவதைத் தீர்மானிக்கும் என்றார். "பழனி அருகே நடந்து வரும் படப்பிடிப்புக்காக இங்கு வந்தேன். தற்போது கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளேன். நான் தீவிர அரசியலுக்கு எப்போது வருவேன் என எனக்கே தெரியாது.

"இந்தக் கேள்வியைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் பதில்தான் எனது பதிலும். நான் எப்படி வருவேன், எப்போது வருவேன் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும். சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைவரான சரத்குமார்தான் முடிவு செய்வார். அதில் நான் தலையிடமாட்டேன்," என்கிறார் ராதிகா. எனினும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது தனது கணவரையும் சமக வேட்பாளர்களையும் ஆதரித்து ராதிகா பிரசாரம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும்போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!