அடுத்த சில ஆண்டுகளில் சிங் கப்பூரர்கள் தங்களுக்கு நீரிழிவு ஏற்படுமா என்பதை இணையம் வழி தெரிந்துகொள்ளலாம். நீரிழிவு நோய்க்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை மேலும் அதிக தொழில்நுட்பம மயமாகிறது. மேலும் சுற்றுப்புறத்துக்கு தீங்கு ஏற்படுத்தாத, நிலைத்தன்மையான எரிசக்தி, போக்குவரத்து, நிதித் துறை, சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண செயற்கை அறிவுத் திறன் தொழில்நுட்பம் போன்றவற் றையும் சிங்கப்பூரர்கள் அனுபவிப் பார்கள். ஆய்வு, புத்தாக்கம், தொழில் முனைப்பு (RIE) 2020 திட்டத்தின் முன்னேற்றம் குறித்த ஆய்வின் அடிப்படையில் சிங்கப்பூரின் ஆய்வுத் துறை மேற்கொண்டுள்ள திட்டங்களில் சில இவை. 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத் தின் ஒன்றரை ஆண்டுகால முன்னேற்றம் குறித்த ஆய்வு செய்யப்பட்டது.
பிரதமர் லீ சியன் லூங் தலைமையில் ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு மன்றத்தின் 10வது ஆண்டுக் கூட்டம் நேற்று நிறைவடைந்தது.